14 . 4 . 2019 முதல் 13 . 4 . 2020 வரை ( புனர்பூசம் 4 - ம் பாதம் , பூசம் , ஆயில்யம் முடிய ) ( பெயரின் முதல் எழுத்துக்கள் : ஹி , ஹீ , ஹே , ஹோ , ட , டி , டே , டோ உள்ளவர்களுக்கு ) விபரீத ராஜயோகம் வீடு தேடி வருகிறது ! கடக ராசி நேயர்களே , விகாரி வருடம் பிறக்கும் பொழுது உங்கள் ராசியிலேயே பிறக்கின்றது . உங்கள் ராசிநாதன் சந்திரனுக்கு 6 - ம் இடத்தில் குரு , சனி , கேது ஆகிய முப்பெரும் கிரகங்களும் சஞ்சரிக்கின்றன . சனி பகவான் உங்கள் ராசிக்கு 7 , 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார் . அஷ்டமாதிபதியாக விளங்கும் சனி பகவான் 6 - ல் சஞ்சரிக்கும் பொழுது 6 க்கு அதிபதியான குருவும் இணைந்திருப்பதால் வருடத் தொடக்கத்திலேயே விபரீத ராஜயோகம்செயல்படப் போகின்றது . இல்லம் நோக்கி இனிய செய்திகள் வந்து கொண்டேயிருக்கும் . 12 - க்கு அதிபதியான புதனும் நீச்சம் பெறுகின்றார் . எனவே பணவரவிற்கு பஞ்சமிருக்காது . எதை எந்த நேரத்தில் எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகின்றீர்களோ , அதை அந்த நேரத்தில் அப்படியே செய்து முடிக்கும் அளவற்ற ஆற்றலும் உங்களுக்கு பிறக்கும் . சென்ற ஆண்டு வருமானத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு வருமானம் கூடுதலாக கிடைக்கும் . உத்தியோக ஸ்தானத்தில் வீற்றிருக்கும் சனியால் ஜீவன ஸ்தானம் பலப்படுகின்றது . எனவே வியாபாரத்தை விருத்தி செய்ய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும் . குரு பகவான் 9 - ம் இடத்திற்கும் , 6 - ம் இடத்திற்கும் அதிபதியாவார் . எதிரிகளின் தொல்லை அதிகரித்தாலும் கூட உங்களைப் பார்த்தால் அவர்கள் சரணடைந்து விடுவர் . தன்னிச்சையாக நீங்கள் எடுத்த சில முடிவுகள் உங்களுக்கு எதிர்ப்புகளை உருவாக்கும் . இருப்பினும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்களின் நட்பால் பகையைநட்பாக்கிக் கொள்ளப்பாடுபடுவீர்கள் . சென்ற ஆண்டில் தலைக்கு மேல் இருந்த கடன் சுமை இப்பொழுது படிப்படியாகக் குறையும் . வீடு கட்டுவதற்கோ , அல்லது தொழிலை விரிவு செய்யவோ , நீங்கள் கடன் வாங்கியிருந்தால் அது இப்பொழுது வட்டியுடன் சேர்ந்து பெரியளவில் விஸ்வரூபமெடுத்துக் காட்சி தரலாம் . ஏதேனும் ஒரு முன்னோர் சொத்துக்களை விற்று , அதில் வரும் லாபத்தைக்கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்தி நிம்மதிப் பெருமூச்சு விடும் வாய்ப்பும் ஒருசிலருக்கு உண்டு . தனுசு குருவின் சஞ்சாரம் ( 14 . 4 . 2019 முதல் 17 . 5 . 2019 வரையிலும் மீண்டும் 28 . 10 . 2019 முதல் 13 . 4 . 2020 வரையிலும் ) இக்காலத்தில் குருவினுடைய பார்வை உங்கள் ராசிக்கு 2 , 10 , 12 ஆகிய இடங்களில் பதிகின்றது . வாக்கு , தனம் , குடும்பம் , தொழில் , கர்மம் , செயல் , எதிர்கால முன்னேற்றம் , வாகன யோகம் , வெளிநாட்டுப் பயணம் , இடமாற்றம் , அரசபதவி , | பிள்ளைகளின் முன்னேற்றம் , சுபவிரயங்கள் , அரசுவழிச்சலுகைகள் போன்றவைகளைஅறிந்து கொள்ளும் இடத்தில் எல்லாம் குருவின் பார்வை பதிகின்றது . அது யோகம்தான் . குரு இருக்குமிடத்தைக் காட்டிலும் , பார்க்குமிடத்திற்குத் தான் பலன் அதிகம் . எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையாக இருந்தாலும் , பற்றாக்குறை பட்ஜெட்டால் அவதிப்பட்டாலும் குருவின் பார்வை பலம் இருந்தால் அதிலிருந்து விடுபடும் வாய்ப்புத் தானாக வந்து சேரும் . கல்யாணமானாலும் சரி , கடைதிறப்பு விழாவாக இருந்தாலும் சரி , எல்லாவற்றிற்கும் குருபகவான் தான் பச்சைக்கொடி காட்ட வேண்டும் . அந்த குரு பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 2 - ம் இடமான குடும்ப ஸ்தானத்தை 9 - ம் பார்வையாகப் பார்ப்பதால் ஒளிமயமான எதிர் காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கப்போகின்றது . படிப்படியாக முன்னேற்றம் வந்து சேரும் . குருவின் பார்வை பலத்தால் பல நன்மைகள் வந்து சேரப்போகின்றது . இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் . கல்யாண வயது வந்த பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்குதிருமணத்தை பேசிமுடித்து மங்கல ஓசை மனையில் கேட்க வழிவகுத்துக் கொள்வீர்கள் . தங்கம் , வெள்ளி , ஆடை , ஆபரணங்கள் வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள் . பல இடங்களிலிருந்து வரன்கள் வந்து பரிசீலனை செய்து பார்த்ததில் எதுவும் பொருந்தவில்லையே என்று ஏக்கத்தோடு இருந்தவர்களுக்கு ஆக்கப் பூர்வமான தகவல் இப்பொழுது வரப்போகின்றது . 10 - ம் இடத்தைக் குரு பார்ப்பதால் முத்தான தொழிலும் வாய்க்கும் , முன்னேற்றமும் அதிகரிக்கும் என்பது ஜோதிட நியதி . அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது 10 - ம் இடத்தில் குருவின் பார்வை பதிவதால் இதுவரை தொழில் அமையவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு புதிய தொழில் அமையும் . கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொடுக்க முன்வருவர் . கேட்ட உதவிகள் வங்கிகளிலும் , வள்ளல்களிடமும் கிடைக்கும் . அரசுப்பணிக்கு முயற்சித்தவர் களுக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும் . கர்ம ஸ்தானம் என 10 - ம் இடம் கருதப்படுவதால் பெற்றோர்களின்உடல் நலத்தில் கவனம் தேவை . பெற்றோர்களின் உடல் நலத்தில் ஏதேனும் சிறு தொல்லைகள் ஏற்பட்டாலும் அது பெரியளவில் வளர்ச்சியடைய விடாமல் ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை களைப் பெறுவது நல்லது . குருவின் பார்வை 12 - ம் இடத்தில் பதிவதால் இடமாற்றம் , ஊர்மாற்றம் கேட்காமலேயே ஒருசிலருக்கு கிடைக்கும் . பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும் . இதுவரை தங்கள் கருத்துக் களுக்கு ஒத்துவராத சகோதரர்கள் இப்பொழுது ஒத்து வருவர் . தந்தை வழியில் மட்டுமல்லாமல் தாங்கள் வாங்கிய சொத்துக்களிலேயே இருந்த வில்லங்கங்கள் இப்பொழுது விலகும் . உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு சகபணியாளர்கள் வெளிநாடு சென்றது போல் தாங்கள் செல்ல முடியவில்லையே என்ற கவலை இனி மாறும் . வெளிநாட்டிலிருந்து கேட்ட சம்பளம் கொடுப்பதாகச் சொல்லி இப்பொழுது அழைப்புகள் வந்து சேரலாம் . வாகன மாற்றம் செய்ய உகந்த நேரமிது . விருச்சிக குருவின் சஞ்சாரம்( 18 . 5 . 2019 முதல் 28 . 10 . 2019 வரை ) இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார் . குறிப்பாக 7 . 8 . 2019 வரை வக்ர இயக்கத்திலும் பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயே உலா வருகின்றார் . உங்கள் ராசிக்கு 5 - ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது 1 , 9 , 11 ஆகிய இடங்களில் பதிகின்றது . எனவே உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் . உள்ளத்தில் இருந்த கலக்கம் அகலும் . தெள்ளத்தெளிவாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள் . பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் . அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் . மக்கள் செல்வாக்கு மேலோங்கும் . கொடுத்த வாக்குறுதி களைக் காப்பாற்றுவீர்கள் . பெயர் , புகழ் உயரக்கூடிய நேரமிது . தொழிலில் பெரிய அளவு முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பதில் அக்கரை காட்டுவீர்கள் . பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டுப் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள் .உத்தியோகத்தில் இருந்த கெடுபிடிகள் அகலும் . இதுவரை உங்கள் கருத்துக்களுக்கு ஒத்துவராத மேலதிகாரிகளின் இப்பொழுது - குணம் மாறுவர் . நீங்கள் கேட்ட சலுகைகளை கேட்ட மாத்திரத்திலேயே கொடுப்பர் . அசதி , அவநம்பிக்கை அனைத்தும் விலகும் . தந்தை வழியில் ஏற்பட்ட தகராறுகள் , பங்காளிப் பகை மாறும் . சொத்துக்கள் வாங்க , விற்க உகந்த நேரமிது . சனியின் சஞ்சார நிலை ஆண்டு முழுவதும் சனி பகவான் 6 - ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார் . 8 . 5 . 2019 முதல் 3 . 9 . 2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார் . 6 - ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 3 , 8 , 12 ஆகிய இடங்களில் பதிகின்றது . எனவே சகோதர வர்க்கத்தினர்களின் மனமாற்றங்கள் ஏற்படலாம் . உங்களோடு ஒத்துவராத சகோதரர்கள் இப்பொழுது ஒத்துவருவர் . இழப்புகளை ஈடுசெய்ய தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் . வெளிநாட்டில் தங்கிப் பணி புரிய வேண்டுமென்று விரும்பியவர் களுக்கு அங்கு தங்குவதற்கான உரிமம் இதுவரைகிடைக்காதிருந்தால் இப்பொழுது அது கிடைக்கும் . பார்த்தவர் வியக்குமளவு வீடு கட்டும் யோகம் உண்டு . உடன்பிறப்புகளின் இல்லத் திருமண விழாக்களை முன்நின்று நடத்திவைப்பீர்கள் . சனியின் வக்ர காலத்தில் வாழ்க்கைத் துணையோடு பிரச்சினைகள் ஏற்படாதிருக்க சுய ஜாதக அடிப்படையில் பரிகாரங் களைச் செய்து கொள்வது நல்லது . ராகு - கேதுக்களின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு 12 - ம் இடத்தில் ராகுவும் , 6 ம் இடத்தில் கேதுவும் வருடம் முழுவதும் சஞ்சரிக்கின்றார்கள் . இதன் விளைவாக வியாபாரத்தில் சில புதிய மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள் . உலுக்கியெடுத்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக மாறும் . வெளிநாட்டிலிருந்து வியக்கும் தகவல் வந்து சேரும் . வியாபாரம் தொழிலில் புதியவர்கள் வந்திணைவர் . எதிரிகளின் பலம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் . நண்பர்களை நம்பி மிகப்பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம் . சனி - செவ்வாய் பார்வைக்காலம் ( 14 . 4 . 2019 முதல் 23 . 6 . 2019 வரை )இக்காலத்தில் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது . எதைச் செய்தாலும் குடும்பப் பெரியவர்களை கலந்து ஆலோசித்துச் செய்வது நன்மை தரும் . நிதானம் , பொறுமை ஆகியவற்றை அதிகம் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது . வாங்கிய சொத்துக்களை விற்பதும் , அதற்கு இணையான சொத்துக்களை வாங்குவதும் வாடிக்கையாகும் . பெண்களுக்கான சிறப்புப் பலன்கள் கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சந்திரபலம் நன்றாக இருப்பதால் தெளிந்த சிந்தனையோடு செயல்படுவீர்கள் . பிறந்த வீட்டிற்கும் , புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்துகொள்வீர்கள் . மூன்றாம் நபரால் ஏற்பட்ட முன்னேற்றத் தடைகள் அகலும் . வரவு செலவுகள் திருப்தி தரும் . கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும் . தொழிலில் உங்கள் பெயரை இணைத்துக்கொள்ள குடும்ப உறுப்பினர்கள் சம்மதிப்பர் . பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை . தாய் மற்றும் சகோதர வர்க்கத்தினர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தோடு உயர் பதவிகள் கிடைக்கும் . இடம் வாங்கும் யோகம் உண்டு . சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை இனி குறையும் . குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்பத்தில் கல்யாண வாய்ப்புகள் கைகூடும் . பவுர்ணமி வழிபாடும் , நரசிம்மர் வழிபாடும் பலன்களை அள்ளித்தரும் . வருடம் முழுவதும் வசந்த காலமாக வழிபாடு திங்கட்கிழமை தோறும் தையல் நாயகி பதிகம் படித்து , வைத்தீஸ்வரர் - தையல்நாயகி வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் . பவுர்ணமி தோறும் மலை வலம் வருவதன் மூலம் மகத்துவம் கிடைக்கும்.